Blog

அமைதிப் பூக்கள்

  • Author: அ. முத்துவேழப்பன்
  • Published On: 10/01/2024
  • Category: others
  • Views: 202
பேசுவதற்கு கவிதை வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும் / Please select the Kavithai text to speak.

அமைதிப் பூக்கள் அள்ளித் தூவட்டுமே. அன்பை விதைக்கட்டுமே. வெடிக்கும் குண்டுகளின் சப்தம் நிற்கட்டுமே. மண்ணில் கொட்டும் இரத்தம் நிற்கட்டுமே. குருதிப்புனலைப் பருகிய உடம்பில் வெறியும் தனியட்டுமே; உடலைச் சிதைக்கும் போர்கள் நின்று உயிர்கள் தழைக்கட்டும்; எரித்தே கொள்ளும் ஏவுகனைகள் தாவுவதை நிறுத்தட்டுமே. வெடிக்கும் தோட்டாக்கள் பூ ஆரமாய் வந்து உடலை தழுவட்டுமே; யுத்தத்தில் வந்த இரத்தம் நிற்கட்டுமே; உயிரைக்குடிக்கும் யுத்தம் உறங்கட்டுமே; தருமோ யுத்தம் திரும்பி உயிரை; திரட்டுமோ பகையை; விரட்டுமோ தர்மத்தை; திருடுமோ நேசத்தை; தாங்குமா உலகம், வெட்டுபட்ட உடல்கள் எல்லாம் துடிதுடித்தே சாயிது; எங்கும் குருதிப்புனல்; நொடியில் சாவு; நோவுது மனசும்; முடமாய் ஆனவர்கள் பல நூறு ஆயிரம்; எடுக்க எடுக்க பிணக்குவியல்; வெட்டிய இடமெல்லாம், வடிந்தே ஓடுது குருதி ஆறு. குருதிமழையில் குளிக்குது பூமி; குண்டுமழையில் குடும்பமே அழியிது; பூமியே யுத்த மைதானமாகுது எங்கும் மரண ஓலமும் மயாணக்காடுகள் தான்; ஒரு நொடியில் அனாதையானது பல கோடி குடும்பம். நண்டும் சிண்டும் அனாதையாகுது; நளிந்தே பட்டினியில் சாகுது. கொட்டிய கோபத்தில், வெட்டிய உடலிருந்து விட்டே ஓடுது உயிரு. நடுங்கும் போர்களத்தில் நாயும் பேயும் எலும்பையும் சதையையும் தேடுது. எல்லைச் சண்டையோ; எலும்புக்குச் சண்டையோ; ஏகாதிபத்திய சண்டையோ; இனப்படுகொலையோ; ஈவு இரக்கம் இல்லாத பாலியல் படுகொலையோ; பகையோ, பலி தீர்க்கும் படலமோ, பார்க்க சகிக்கலையே; தாலியறுத்த மாந்தர்கள், நாதியத்து கிடப்பதைப்பார். அழகாய் ஓடிய நதியில், இரத்தவாடை அடிப்பதைப்பார். ஓயாத அழுகுரல்கள்...மரண ஓலங்கள்; அடுக்கடுக்காய் கிடக்கும் சடலங்களில் அழுகிய பிணங்களும் கிடப்பதைப்பார்; யார் தந்த சாபமோ; தாங்கியது பூமி; கண்ணீர் விட்டு கதறுது சாமி. சோகத்தில் துடிக்குது மனித இனம். சொந்தத்தைத்தேடியே கண்ணீர்வடிக்குது மனித இனம்; சொத்து சுகம் சொந்தத்தை விட்டு ஊர் மாறிப்போகுது; தொட்ட உறவு எல்லாம் தொடர்பு அறுத்து போகுது; என்ன யுத்தமோ, ஏன் இந்த குண்டுகளின் சப்தமோ; நிற்கட்டும் யுத்தம் இனி உனக்கெதற்கு இரத்தம். அமைதிப் பூக்கள் கசங்காது மீண்டும் மலரட்டும். கண்ணீர் வடிக்காது இதயங்கள் சிரிக்கட்டும். குண்டு மழைபொழியாது அமைதியில் பூமியும் நனையட்டும்; அன்பை பூமி தழுவட்டும். வந்தே புவியில் அமைதி குடி கொண்டு உறங்கட்டும்; சுதந்திர பூமியில், சுகமாய் பறவைகளும் திரியட்டும். தறிகெட்ட மனிதக் கூட்டம், மறுபடியும் அகிம்சை வழியில் வாழட்டும். பாசம் மீண்டும் படரட்டும்; பாவம் கழிந்து, புண்ணியம் தொடரட்டும். குண்டு மழை பொழிவது ஒடுங்கட்டும். அன்பு மழை பொழியட்டும்; பாசப்பயிர்கள் வளரட்டும்; அன்பை பூமி தழுவட்டும். மனித நேயத்தில் மக்கள் ஒன்று சேரட்டும்; அமைதிப் பூக்கள் மீண்டும் பூக்கட்டும், வேண்டாம் வேண்டம் விபரீத விடியல்; அமைதிப் பூக்கள் மீண்டும் பூக்கட்டும்; மனித நேயம் மீண்டும் பிறக்கட்டும். மனிதனை மனிதன் அடித்து சாகும் போர்கள் நிறுத்தப்படட்டும்; புவியைவிட்டு மனிதயினம் போகமால் இருக்க, அமைதிப்போர் தொடரட்டும்; அன்பை வீசி புவியை மணக்கச் செய்யட்டும்; இரத்த ஆறு இனியும் பாயாது; இதயத்தில் கருணை மழை பெய்யட்டும். அமைதிப் பூக்கள் மீண்டும் பூக்கட்டும். அன்பை நேசத்தை பாசத்தை மனித நேயத்தை வளர்க்கட்டும். 36. அமைதிப்புறா சுடுவதற்கு அல்ல பறப்பதற்கு, அமைதியை பரப்புவதற்கு சுமை கூட சுகம் தான், சுகமாய் சுமக்கும் போது; சினம் கூட மணம் தான், சிரிப்பால் மன(ய)க்கும்போது; சினமும் சிதறும் தான் சிரித்து மகிழும் போது. ரணம் கூட ரசனைதான், ரசித்து வலியை ஏற்கும்போது; கண்ணீரும் கரிப்பதில்லை, கருணை மழை பொழியும்போது; சோகமும் சுவை தான், சோகத்தில் சொந்தம் கூடும்போது; கோபமும் குதூகலம் தான், கோபப்படாது ஏற்கும்போது; விரக்தியிலும் விடிவு உண்டு, முடிவு இவ்வளவுதான் என்று எண்ணி விடுபட முயலும் போது; தவறுகள் செய்தவனும் நல்ல மனிதனாகலாம் தன்னை திருத்திக் கொள்ளும் போது; முரடனும் சாந்த சொரூபி ஆகலாம், சீற்றமும் சிறிதாகும் போது; சிந்திக்கத் துவங்கும் போது; ஆத்திரமும் அடங்கிவிடும், அன்பு சுரக்கும் போது, விரோதமும் விலகிவிடும், விரும்பி பழகும் போது; குரோதமும் குறைந்துவிடும், குணத்தோடு பழகும் போது; அகங்காரம் அடங்கிபோய் விடும், அன்பைத் தேடும் போது; ஆவேசமும் ஆரிப்போகும், ஆத்மா அமைதி காணும் போது; ஆத்திரமும் அடியோடு போய்விடும், அமைதியாய் உண்மையை அறியும் போது; இம்சையும் இனிமையாகும், அகிம்சையை கடைபிடிக்கும் போது; வக்கரமும் வடிந்துவிடும், வாழ்வியலில் நெறியைக் கடைபிடிக்கும்போது. ஆத்திரம் அடியோடு போய்விடும் ஆறுதலாய் பேசும் போது; ஆணவமும் அடங்கிப்போகும் அறியாமை இருளை நீக்கும் போது; பகையும் பறந்தோடும், பாசமழை பொழியும் போது; மன உலைச்சலும் மாறிப்போகும், மகிழ்ச்சி காணும் போது. சலிப்பும் களிப்பாகும்; கலகலவென்று பழகும் போது; சீண்டுதலும் உந்துதலாகும், உண்மையை உணரும் போது. சுழிப்பில் தெரியும் வேகம் சலிப்பால் தெரியும் சோகம் துயரத்தின் உயரமே துன்பம், துரத்தி ஓடும் தூரமே இன்பம்; துன்பமும் இன்பம்தான், தூக்கிப்போட பழகும்போது; துடிப்பும் தவிப்பும் பழசுதான், இறுக்கமான மனநிலையை மாற்றும் போது; வெறுப்பும் விருப்பமாகும், விரும்பத்துவங்கும் போது. துக்கமும் தூசியாய் பறக்கும், தூங்கி எழும் போது. அச்சமும் துச்சமாகும், அசைத்துப்பார்க்கும் போது; பயமும் பாகாய் உருகும், பக்குவப்படும்போது; ஏமாற்றமும் ஏளனம் செய்யும், எட்டி ஒதுங்கும் போது; பொறாமையும் பொடியாய் போகும், பொருத்து செயல்படும் போது; எதிர்பார்ப்பும் ஏக்கம் தான், ஏமாறும் போது; பற்றின்மையும் பறந்து போகும், பாசம் சுரக்கும் போது; இழப்பையும் ஈடுபடுத்தலாம், இதயச் சுமையை இறக்கும் போது; கவலையும் கடந்து போகும், கண்ணீர் விட்டு அழுது முடிக்கும் போது; கெடுதலும் விடுதல்தான், கெட்டவனை ஒதுக்கும் போது; தாழ்வு பணிவல்ல; தாழ்வு என்பது தலை குனிவு; தாழ்ச்சியும் வீழ்சிதான்; தாழ்வை வீழ்த்தலாம், தவறென்று அறியும் போது; கிலி பிடித்தவன் பேடி ஆவான், கிள்ளிப்பார்ப்பவன், சொல்லிவரமாட்டான் பேடி என்றும் பாடி வருவான்; ஆவேசம் அடங்கிவிடும்; ஆத்திரம் அடியோடு மறையும்போது. தீங்கு செய்பவன் தீயவன் ஆகின்றான்; திருந்தியவன் மனிதனா கின்றான்; எதுவும் சாத்தியம் தான்; எடுத்த காரியத்தை சிறப்பாய் முடிக்கும் போது; மட்டமான செயல்கள் உன்னை சரிக்கும்; மடமையான செயல்கள் உன்னை பார்த்து சிரிக்கும்; மனம் விட்டு சிரிக்கும் ஒவ்வொரு முறையும் மரணம் ஒத்திப் போடப்படும்; உயர்வான எண்ணங்கள் உயர்த்தும், தாழ்வான, தலை குனிவான செயல்கள் உன்னை எரிக்கும்; புலம்பல் புழுவாய் துடிக்க வைக்கும், புகல் உன்னை உச்சியிலிருந்து தள்ளப் பார்க்கும்; பகட்டு வாழ்க்கை பரிதாபமாய் முடியும். தோல்வி தொட்டாலும் தொல்லை என்று எண்ணாதே; தோல்வியை எதிர்த்து தொடர்ந்து போராடு, வெற்றியே ; தோல்வியை தொடரவிடாது உழை; ஜெயம் உனக்கு; கேலி கிண்டலையும் கிழித்து போட்டு, கிடு கிடு என்று வீர நடை போடு; வெரும் பயலுக்கே வெறி வரும்போது, வெற்றியாளனுக்கு வெல்வோம் என்ற வெறி வேண்டும்; வேதனையை துடைக்க கண்ணீர் வேண்டாம்; இதயத்தில் கிடக்கும் சோகத்தை அகற்று; விடியட்டும் பொழுதும் விழுந்தே படரட்டும் மனித நேயம்; தொடரட்டும் அன்பு, பாசம், பரிவு, பணிவு, கனிவு, அரவணைப்பு இரக்கமும். அமைதிப்புறா சுடுவதற்கு அல்ல பறப்பதற்கு, அமைதியை பரப்புவதற்கு. .

Comments:

No comments added yet.

Shape Shape Shape Shape Shape

Shape Shape

Email Address

mvezhappan@gmail.com

Home Location

Chennai, Tamil Nadu, India.

Phone Number

94449 27111

Social Media