கவிதைக் காதல் பைங்கிளி இவள்; மான் ஐயள் அமர்கண்கள்; வையெயிற்று மடந்தை ஐயை மையல் விழியாள்; மதிநுதல் மங்கை; பூக்கண் பூத்த நொதிப்பார்வை; நுரை மேனி, நுனிஆசை; நிறை காதல், அடர் கங்கூல் கேசம்; வலைந்த புருவம், வரைச்(வரைந்த) சித்திரமோ தேகம்; வதைக்கும் வதனம்; சிதைக்கும் அந்தரங்கம்; சிரிக்கும் மோகம்; புதுப்புனல் பாய்ந்த பொழிவு மேனி; பூச்சரச் சிரிப்பு; பூக்கும் நறுமண கூந்தல்; தீம் கரும்பும் கசக்கும் பல்சுவை இதழ்; தீட்டிய மை; வாட்டிய விழி; தீண்டும் கவர்ச்சி; தோண்டும் ஆசை; மைனாப்பார்வை, மயக்கும் போதை; மடக்கும் ஜாடை; முகில் தந்த மையல்; முனகுகின்றாள் இந்த தையல்; பிறை திங்கள் நெற்றி; பெயர்த்திடும் அழகு; பொய்த்தது நிலவு; வியத்தது விண்ணும்; விருந்துண்டது கண்ணும்; திங்கள் பிறையுடையாள்; தீம் பலா சுவையுடையாள்; மென் கொங்கையாள்; மெய் மறந்த மொழியாள்; கவ்விய இதழ் உடையாள்; கவின் நாவுடையாள்; உண்ட மேனியாள்; வலியும் வளியாய்(காற்றாய்) வீச; வதைத்த நினைவுகளும் வருடித்துடிக்க; விதைத்த உயிரை விரும்பியே குடிப்பாள்; சலசல என்று சலங்கை ஒலி கூட குமிழ்ந்தால் குரல் தடுமாற உமிழ்ந்தால் செதுக்காத அழகை குடைந்தால் குறு குறு விழியால்(ள்) களவானியின் கானகநாடன் தூண்டும் அயல்கண் துமிந்து துடி துடிக்க கயல் இவள்பால் கலந்து விளையாட கரங்கள் தான் தேடாதோ; இவள் தோள் மேல் தலை சரிய, வால் அருவிக் கூந்தல் ஆட, காந்தல் விழிகண்டு காதல் மொழி கணைக்க அசைக்கமுடியாத மோகனத்தைக் கண்டு ஆசை இசைக்க வந்தே பதறிய வையத்து நிலவும் நொந்தே ஒளி சிதற தயக்கமோ; தந்த சுகம் இது வலி சுமந்து வந்தே வழி தடுமாற. வெந்தே போனான் வந்த வம்பால்.. மாந்தளிர் மேனி வியர்க்க; பாய்ந்த அருவியாய் பைங்கிளி மனமும் ஓட, தேடலும் ஊத்துத்தான் தேரல் தந்த உளறல் தான்; தெவிட்டாத வேட்கைதான்; பாடல் புதிதுதான் பழம் தமிழ் தந்த சவைதான்.
Chennai, Tamil Nadu, India.