Blog

இதுவும் காதல்தான்

  • Author: அ. முத்துவேழப்பன்
  • Published On: 12/01/2024
  • Category: kadhal
  • Views: 120
பேசுவதற்கு கவிதை வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும் / Please select the Kavithai text to speak.

இதுவும் காதல்தான்; இனம் தெரியாத போதைதான்; இடம் மாறியது இதயம் தான்; இதுவும் காதல்தான், இரவு பகல் ஓடுவது துன்பம் தான்; இதுவும் காதல் தான் நடமாடுவது கனவு உலகில் தான்; இதுவும் காதல் தான் உடல் தீண்டாத உன்மைக்காதல் தான்; உள்ளம் தொடும் உண்மைக் காதல் தான்; எண்ண அலைகள் உன்னை சுற்றி வந்தே வட்டம் இடுவது உண்மை தான்; இவர்கள் வேற்றுலகில் சஞ்சரிப்பர்; பசியே எடுக்காது, பார்த்துக்கொண்டே இருந்தால் போதும் என்று நினைப்பர்; இதுவும் காதல் தான்; இவளைச் சுற்றி சுற்றி வந்தது இவனது நினைவுகள் தான்; இவள் நினைவு அவனாய் இருக்கும்; இதுவும் காதல் தான் இவளுக்கு வரும் துன்பத்தையும் தாங்காது இவனது இதயம் தான்; அவள் இதயம் தாங்குவது அவனைத்தான்; இதுவும் காதல் தான் நேரம் போவது தெரியாது நேரமே போதவில்லை என்று தவிப்பர். இதுவும் காதல் தான் குமுறிவரும் கோபமும் தாபமாய் மாறும்; நீ என்னை அதிகம் நேசிக்கின்றாயா நான் உன்னை அதிகம் நேசிக்கின்றேனா என்ற போட்டி நடக்கும் இதுவும் காதல் தான்; பசியிருக்கும் புசிக்க மனம் வராது; ஏதோ எடுக்கப்போய்; ஏதோ செய்வாய்; மறதி வந்தே உன்னை வதைக்கும், மறுபடியும் மறுபடியும் செய்ததையே செய்வாய், சொன்னதையேச் சொல்வாய்; வாய் குழறும்; பாய்விரித்தும் தூக்கம் வராது. பசி எடுத்தும் உண்ண நினைப்பு வராது; இதுவும் காதல் தான்; இரவும் பகலாய் தெரியும்; இதயம் ஓடிப்போவதுபோல் தெரியும்; உள்ளம் மெழுகாய் ஒழுகும்; உணர்வுகள் ஊசி முனையாய் குத்தும்; உறிஞ்சும் அட்டையாய் உன் நினைவுகள் உன் உணர்வுகள் உன்னை உறிஞ்சும் ஓடிப் போகலாமா, தேடிப்போகலாமா என்று புலம்புவாய் இதுவும் காதல் தான்; உனக்குள் பட்டாம் பூச்சி பறக்கும்; பார்க்கும் திக்கெல்லாம் அவள் முகம் தெரியும்; பார்ப்பவர் எல்லாம் அவள் தான் இவள் தான் என்றே ஏங்கித் தவிக்கும்; ரத்த ஓட்டமே நின்றது போல் இருக்கும்; அவளுக்கு அவன் முகம் எங்கே எங்கே என்று தேடி தவிக்கும்; பார்வையிழந்தது போல் இருக்கும், பழகப் பிடிக்காது; பயம் வந்தே சேரும்; இவளது பருவமேனி துடிக்கும்; அவன் உருவம் வந்து வந்து வதைக்கும்; உயிர் இருக்கும், உடல் வதைக்கும், கண்ணீரும் சிந்தும் தடுமாறும் கால்கள், தவிக்கும் மனம்; தாவும் உள்ளம்; துடி துடிக்கும் இதயம்; தாங்காத இதயம் தேடும். ஏன் பொழுது புலர்ந்தது என்றே கோபப்படுவர்; ஓடும் ஆசைதான்; தேடும் ஆசைகள் தான்; ஒழிந்தே பார்ப்பதில் இன்பம் தான்; நரம்பும் வாத்தியக் கம்பியாய் சுரம் வாசிக்கும்; ஒருநாள் முகம் பார்க்க வில்லை என்றாலும் ஒரு யுகமே கடந்தது போன்று தோன்றும்; பார்த்து விட்டால் கண்ணுக்குள் யுத்தமே சப்தம் இல்லாது நடக்கும் அவள் குரல் மட்டும் உன் மூளையில் ரீங்காரம் செய்யும்; இவள் இருக்கமுடியாது தவிப்பாள், இவளது காது அவன் குரலை மட்டுமே தேடும்; அசையாத சிலைபோல் இருப்பாள், பள்ளம் தெரியாது; பாதை புரியாது; பார்த்த உலகம் பிடிக்காது; வருபவர் போவர் யார் என்று தெரியாது; அருகில் இருப்பவர்களை வெறுப்பாள்; இவனுக்கோ பூக்களில் அவள் முகம் தெரியும்; புழுவாய் மனம் துடிக்கும்; தனிமை தடுமாறும்; தலையணை நனையும்; வீட்டுக்குள் அடைமழையே பெய்யும்; காதல் கடலில் கிடந்து தத்தளிப்பான்; மீட்க அவள் வருவாள் நீட்டிய கரங்களை அவன் பற்றுவான், மீளாத சொர்கத்தில் கிடந்து தடுமாறுவர்; திடீர் என்று எழுந்து பார்த்தால், தரையில் கிடப்பான்; சீ சீ என்று சொல்லியே எழுவான்; பசி எடுக்காது; பல்விளக்காது பருகுவாய்; பகல் என்றே இரவில் எழுவாய்; பகலில் உறங்கத் தவிப்பாய்; பால் நிலவைப் பார்த்து பலிப்பாய்; உடையில் பித்தானை மாற்றிப்போடுவாய்; உடையும் என்ற உணர்வே இல்லாது பாட்டிலை விடுவாய்; கண்ணாடியில் அவள் முகம் காண்பாய்; கழங்கிடும் விழியில், குழம்புவாய்; முன்னாடி அவன் வந்து நிற்பதுபோல் பிம்பம் தெரியும் இவளுக்கு; இல்லையே என்று விம்புவாள்; தெருவீதியில் தேடுவாய்; அவள் உன்னை நேசிக்கின்றாளா நினைப்பாளா என்றே தவிப்பாய்; அவன் உண்மையாய் நடப்பானா; உன்மையில் அவன் விருப்புகின்றானா என்ற தந்தேகம் இவளுக்கு வரும்; எந்த பெண்ணிடமாவது எதற்காவது பேசியதை பார்த்துவிட்டாள் சந்தேகம் வரும் அவளுக்கு பொருமுவாள் குறை கூறுவாள் கொன்றே விடுவதுபோல் கதறுவாள்; இவனோ மழுப்புவான்; அவளோ வதைப்பாள் காதல் வலி தாங்காது நீயோ கண்ணீர் வடிப்பாய் உன்னுள் சிரிப்பாய், பித்து பிடித்தது போல் நடிப்பாய்; அவள் அவள் அவள் என்னவள் என்றே நினைப்பாய்; அவளும் அணுவாய் உன்னுள் புகுந்து குடைவாள்; இவன் இவன் இவன் என்னவன் என்றிப்பாள்; இனிய கதைகள் கோடி பேசத் தவிப்பாள்; வளையல் ஆடுவதைக் கூட ரசிப்பாள்; வாய்விட்டுச் சொல்லத் தவிப்பாள்; வதைத்திடும் அவள் கரங்கலோ அவன் என்று நினைத்து தழுவத்துடிக்கும்; குடத்தை இடுப்பில் வைத்த படியே தவிப்பாள்; அவளுக்குப் பிடித்த பொருளாய் தேடுவாய்; கிடைக்க வில்லை என்றால் அர்த்தமே இல்லாத உலகம் என்று சபிப்பாய்; இவளோ எடுத்ததைலெல்லாம் அவனுக்கு கொடுக்க வேண்டும் என்று தவிப்பாள்; வைத்த உணவில் வட்ட நிலவும் வலைவும் போட்டுப்பார்ப்பாள்; உண்ணாது தவிப்பாள்; சூடுகூட உனக்கு சுகம்தான்; சுடும் நினைவுமே, உனது வதைதான்; சுற்றி நடப்பதை மறப்பர்; சப்தமில்லாது வந்து பார்க்க துடிப்பர்; கைபேசியில் காலத்தைக் கழிப்பர்; கைபேசியில் மணியடித்தால் முண்டிக்கிட்டு ஓடுவர்; ஓரமாய் நின்றே பேசத்தவிப்பர்; ஒருக்கழித்துக்கிடந்தே துடிப்பர்; தொடும் உணர்வு கூட மறப்பாய்; தொட்டால் சினத்தில் குதிப்பாய்; செத்துவிடலாமா என்றே தவிப்பாய். புலம்பலில் புது சுகம் காண்பாய்; புல்லும் முள்ளாய் தெரியும்; தொண்டை வரைச் செல்லும் உணவு, நிலவும் சுடும்; நீல்வானம் சூனியமாய் தெரியும்; நித்திரை வதைக்கும்; அவள் நினைவு வந்து உண்டதும் தொண்டையிலே உணவு சிக்கும்; விக்கலிலே சுகம் காண்பாய்; விக்கலிலும் அவள் நினைக்கின்றாள் என்றே சிரிப்பாய்; சிக்கிய சிகையைக் கூட எடுக்க தவிப்பாள்; சினுங்கியே சுமையாய் நினைவை சுமப்பாள்; விளகிப்போக நினைப்பாய், விரும்பம் இல்லாமல் வேலைகளைச் செய்வாய்; விஷத்தைக்கூட உண்ண துடிப்பாய்; விளகிப்போகாமல் இருக்கவேண்டும் என்றே நினைப்பாய்; திடீர் என்றே பக்தனாய் மாறுவாய்; பலக் கோவிலுக்கும் படைஎடுப்பாய்; பித்தனாய்த் திரிவாய்; பிடிவாதம் பிடிப்பாய்; நடிப்பாய்; நண்பரிடமும் உறவினரிடமும் நடிப்பாய்; தாயிடம் கெஞ்சிவாய்: தந்தைவந்தவுடன் தடுமாறுவாய்: தங்கையிடன் கூறுவாய்; ஆக மொத்தத்தில் உளறுவாய்; இவளும் அப்படித்தான்; இருட்டை வெறுப்பாள்; இருக்கையை துறப்பாள்; இங்கும் அங்கும் நடப்பாள்; இசைகூட கசப்புதான்; நினைத்து கேற்க மறுப்பாள்; இதயத்துடிப்பை எண்ணுவாள்; இருட்டிள் அமர்ந்து இதயத்தை உருட்டுவாள்; ஓர விழியில் உருகுவாள்; ஓவியம் தீட்ட நினைத்து கிறுக்குவாள்; கிறுக்கிப்போல் கிடப்பாள்; கிறுக்கன் கிறுக்கன் என்றே கூறியபடி, கீழேபார்த்து தவிப்பாள்; இதுவும் காதல் தான்; இன்ப ஊத்துதான்; இதயம் துடிப்பது உண்மைதான்; உலகமே நாடகமேடையாய்த் தெரியும்; நீயும் அவளுடன் சேர்ந்து நடிப்பது தெரியும்; கூண்டுக்கிளியாய் தவிப்பதை உணர்வாய்; அவள் கூடவே இருக்கத் துடிப்பாய்; அவன் ஓடிவரமாட்டானா என்றே தவிப்பாள்; இருக்கமான நினைவில் தவிப்பாய்; தூங்குவது போல் நடிப்பாய்; தூக்கத்திலே புலம்புவாய்; வாய் குழறும்; கால் நடைபழகும்; நாள் தொடரும்; கண் இருளும்; உடல் வதைக்கும்; உள்ளம் உருளும்; விழித்துளி விழும்; துவண்டுவிடுவாய்; உடல் கனக்கும்; நட்சத்திரங்களிலெல்லாம் இவள் இவன் முகம் தெரியும்; வளர்ந்த மரம் கூட விறகாய் தெரியும்; விழுந்த சறுகுகூட சிரிப்பதாய் நினைப்பர்; எல்லாம் எல்லாம் எங்கே எங்கே என்றே தேடுவர்; மழைத்துளி பன்னீர் துளியாகும்; இல்லாததை இருப்பதாய் நினைப்பர்; இருப்பது இல்லாததாய் இருக்கும்; காதலை சொல்ல தவிப்பர், ஏனோ சொல்ல தயங்குவர், நாட்கள் ஓடும், ஆனால் உண்மை காதலை சொல்ல தடுமாறுவர்; இதுவும் காதல் தான் இதயத்தில் பூத்த இன்ப இம்சைதான்.

Comments:

No comments added yet.

Shape Shape Shape Shape Shape

Shape Shape

Email Address

mvezhappan@gmail.com

Home Location

Chennai, Tamil Nadu, India.

Phone Number

94449 27111

Social Media