கடப்பாரைக்கு இடம் கொடுக்காத பாறை கல்லுக்குள் ஈரம் சுமக்கும்; கடந்து செல்லும் பறவைக்கு இருக்கை கொடுக்கும்; கனி தின்ன பறவையும் எச்சம் மிடும்; மிச்சம் இருந்த விதையும் மழைத்தூவலில் வித்தாகும், வித்தும் விருட்சமாகும். அதுபோன்று, மனம் என்னும் மனப்பாறையிலும் உறவு எனும் அன்புப் பறவைகள் வந்தமரும் உ(கொ)ண்ட நேசத்தில் விழுந்த அன்பெனும் வித்தால் மழை நீரால் அல்ல கருணை நீரால் பாசம் என்னும் பசுமை பிறக்கும். உறவு என்னும் விருட்சம் படாந்தே வளரும் குணப்பாறை இறுகினால் குற்றம் கூடும், சுற்றம் குறையும். அடக்கு முறைக்கு பணியாத உள்ளம் அன்புக்கு அடிமையாகும். பகைக்கு அஞ்சாத நெஞ்சம் பாசத்திற்குள் அடைக்கலமாகும் காலை வணக்கத்தைக் கூறும் அன்பன் அ. முத்துவேழப்பன்
Chennai, Tamil Nadu, India.