அழகழகாய் பூக்குதே வானம்; அள்ளித் தெளித்த கோலம்; சிந்தி சிதறிய மேகம்; சிரிக்குது பொழுதும்; பளிச்சென்று அதிகாலை விடியலை வடிக்குதே வையகம்; பச்சை போர்வையை விரிக்கிது பயிரினங்கள்; பசுமைக்கூட்டம் பார்க்க அது சுகம்; பவள மூக்கை காட்டிய பைங்கிளிக்கும் வந்ததாம் பாதகம்; பக்கத்தில் வந்த அணிலும் பழம் என்று கொத்தி தின்ன வந்ததாம்; அலைகடலும் ஓயாது இசைக்குதே ராகத்தை ஆசையை தீர்க்க தாவும் அலைகளும்தாவி குதிக்குது; ஆசைக் கடலும் பாயாது தேடுதே மோகத்தை இசைக்கச்சேரியே நடத்துது சோலையில் புள்ளினங்கள்; உதய சூரியனும் உறங்கி எழுந்து உதயம் ஆகத் தவிக்கின்றான்; தள தள வென்றே ஜேலிக்குது தலை உச்சியில் வானம்; வகுடு எடுக்குது வழிந்தோடும் அருவியும்; வாய்விட்டு சிரிக்குது பூத்த புவியும்; மண மணக்கும் காலைப்பொழுது; மங்கள முழக்கம் தான் எங்கும். மட மட வென்றே கூறையில் ஏரி கூவி விடியலை அழைக்குது கொக்கரக்கோ சேவல்; மண்ணுக்கும் விண்ணுக்கும் என்ன உறவே; புதுமணப் பெண்ணாய் வெக்கியே தலை காட்ட தயங்குது கங்குல் தாண்டு அலரும் பொழுது; உலாவும் தென்றலும் உள்ளத்தை உசுப்பும் உச்சைத்தொட இச்சைகொண்ட சூரியனும் உயரே எழும்பும்; தூவியே அள்ளித் தெளிக்கிது சோலையில் பூக்களின் வாசம்; தாவியே விளையாடுது மந்திக் கூட்டங்கள் பந்தி விரிக்குது இயற்கை கூட்டங்கள்; எங்கும் காலைப் பொழுதின் பரவச ஆட்டங்கள்; அமுத கானம் பாடுது கானகத்து பறவை களும்; சுருதியும் லயமும் உருகி சுகமாய் சேரும் தருணம்; ஜோடிக்கிளிகள் ஜாடை காட்டி ஒன்றாய் சேரும் தருணம் காற்றில் மிதக்குது மேகம்; காயப்படுத்துமோ! மோகம்; விருந்து படைக்குது வானம்; விளையாடி லயிக்குது இதமாய் இதயம்; விடை பெற முடியாது துடிக்கிது மனதும்; மாணிக்கப் பருதியும் விரைந்து சென்று, ஆர்ப்பரிக்கும் அலை கடலில் விழுந்திட துடிக்கும்; பிந்தி பழுத்த வானம்; பிடிவாதம் பிடித்தே ஓடும்; உதிருது மாலை தாண்டிய வேலையும் அத்தனை கோலம், செம்பவளக் குவியலே சிதரிக்கிடப்பதுபோல் தோனும் ஆனால், அடுத்த கணப்பொழுதில் அந்த அந்திப் பொழுதை காணும்; பின்னல்கள் போடுது பிந்திய வானம்; பிந்தி வந்த நிலவும் பந்திவிரிக்கிது பாரும்; இருலுக்கும் நிலவுக்கும் என்ன தான் உறவோ இறங்கி வரத்தவிக்கிது நிலவும்; வான வீதி எங்கும் நட்சத்திர பூக்கோலம்; வந்தே சூழுது கார்முகிலும்; மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்; மினிக்கிக் காட்டுது மின்னலும்; ஆடும் பெண்டீரின் கருங் கூந்தலைப் பார்த்து, குலுங்கி, குலுங்கி, பொறுமி தவிக்கிது அந்த கார்முகிலும்; பிடிவாதமாய் இடிக்கிது அந்த மழைமேகம்; பொழிந்தே நனைக்குது வானம்; தூவிய மழை நின்றும், துளிர்த்த இலையிலிருந்து சொட்டும் மழைத்துளிகளும். தெக்கத்திய காத்து தேடி வருது; பொதிகை குளிர்பூந் தென்றலும், தாமரையின் மடல்களை அசைத்தே தடாகத்து நீரை வருடும்; அலை அலையாய் நீரை அசைத்தே இசைக்கும் தென்றலும் இதமாய் குளிரை பரப்பும்; சுகமாய் காற்றை சுமந்து விளையாடுது தேகம்; ஓடை ஓரத்து பூக்கள், ஒத்தையடிப்பாதையில் உதிர்ந்தே ஒயிலாய் தீட்டுது ஓவியம்; ஒட்டிய தேனை உறிஞ்ச படை எடுக்குது சிற்றெரும்பும்; விருந்து படைக்கிது மோகம், விழுந்தே தவிக்கிது மனமும்; விடியலுக்கு தயாராகிறது இந்த அதிகாலை வானம்; இரவைத் தாண்டி எழுந்து, வீதி எங்கும் ஒளியை பரப்ப, உதயமாக தவிக்கிது ஞாயிறும், விரித்த வண்ண மயில் தோகையாக, விடியலும் வடிந்து கிடக்க துடிக்கும். அதிகாலை எழுச்சி தான் அந்த வானம் செய்யும் புரட்சி தான்; அழகழகாய் பூக்குது வானம் தான் அதைப் பார்க்கத்துடிப்பது கண்கள் தான். அ. முத்துவேழப்பன்
Chennai, Tamil Nadu, India.