ஏடா கூடா உடை ஏன் இல்லை தடை ஏடா கூடா உடை என் இந்த வதை ஏடா கூடா உடை ஏன் இந்த நடை எட்டிப்பார்கத் துடிக்குது பருவவாடை எட்டாமலே போன எட்டம் பத்தாத ஆடை. மனிதமேனியிலே மறைப்பதை மறைக்காமல் மாடு மிருகமாய் வீதியில் வளம் வருது ஏடா கூடா உடை; ஏனோ இல்லை இதற்குத் தடை. ஏடா கூடா உடை இன்றைய இளைஞர்கள் நாகரீக மோகத்தில் போடும் உடை. ஏடா கூடா உடை ஏன்டா உனக்கு இந்த நடை ஏடாகூடா ஆடை அசிங்கத்தை அரங்கேற்ற வந்த ஆடை அருவருப்பு அரிதாரம் பூசுது; நாகரீகம் போடும் பீடிகை நரபலி தேடுது இங்கு மோக நடை; தேகத்தை தேய்த்தே பார்க்குது இந்த ஆடைகள்; தேடித்தேடி பார்த்தாலும் கிடைக்காத தேய்ந்துபோன கலாச்சார உடை, ஏடாகூடா ஆடை பஞ்சத்தைப் போக்க வந்த பத்தாக்குறை ஆடை; ஏடாகூடா உடை , அலங்கோலமே அதன் அபலநிலை. ஏடா கூடா உடை எட்டியேப்பார்க்குது தொடை. ஏடா கூடா உடை அது எட்டம் பத்தாமல் சுருங்கிப்போன உடை. சுத்தத் தேவையில்லாத சுதந்திரமாக போடும் உடை சுகமாய் காற்று வாங்கும் உடை. ஏடா கூடா உடை எதற்கு இந்த உடை நாகரீக குப்பை தந்த சீதனமே (சின்னமே) இந்த உடை; நடக்கக் கூட முடியாத சிக்குன்னு இருக்கும் உடை. சகிக்க முடியாத சிக்கன உடை. சீரழிக்க வந்த உடை ஒட்டப்பட்ட உடை ஒட்ட வில்லை நடை; ஏடா கூடா உடை எதுக்கு இந்த அநாகரீக உடை ஏடா கூடா உடை எட்டிப்பார்க்கவே தூண்டும் எட்டம் பத்தாத உடை ஏடா கூடா உடை ஏடா கூடா உடை துண்டு துண்டாய் துண்டு போட்டே தைத்த பிட்டு உடை சுண்டியே இளவட்டங்களை இழுக்கும் இந்த உடை ஏடா கூடா உடை கண்ணியம் அன்நியமாகி கண்ணுக்குத்தெரிய கட்டழகை காட்டி ,வெட்கத்தை விட்டு மானத்தை கடைசரக்காக்க கட்டிவந்த உடை எங்கள் கலாச்சாரத்தை சீர்கெடுத்து படுகுழியில் புதைக்கவந்த இந்த ஏடா கூடா உடை. காலை வணக்கத்தை கூறும் அன்பன் அ. முத்துவேழப்பன் 21/05/2024
Chennai, Tamil Nadu, India.