பெற்றோர்களை மறவாதீர் பிள்ளைகளே ஜீன் 1, உலக பெற்றோர் தின வாழ்த்துக்கள் பெற்றோர்கள் நம்மை பெற்றதனால் பெறுமை பெற்றவர்கள்; உரு கொடுத்து உதிரம் கொடுத்து, உயிர் கொடுத்த உற்றோர்கள்; அன்பை கொட்டி வளர்த்தவர்கள்; அசைக்கமுடியாத நம்பிக்கையே அவர்கள்; ஆசையாய் வளர்த்தவர்கள், அன்பை சொரிந்தவர்கள்; பாச மழை அவர்கள்; பசி என்று துடிக்குமுன் துடி துடித்து நமக்கு புசித்திட உணவு தந்து ஊட்டி வர்த்தவர்கள்; ஆணிவேராய் இருந்தவர்கள்; வாழ்வின் அச்சாணியே அவர்கள்; அனைத்தையும் நமக்காக தந்து துறந்து வாழ்ந்த மகா துறவிகள்; நம்மை உய்த்தவர்கள்; நமக்கு உலகை காட்டியவர்கள்; நமக்காக வாழ்பவர்கள்; விலகியே சென்றாலும் விடாது நம்மையே சுற்றி வருபவர்கள்; நமக்கு கெடுதல் நினைக்காத ஒரே ஜீவன் நம் பெற்றோர்கள்; நமக்காகவே தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்த தியாக சீலர்கள்; பெற்றோர்கள் விலைமதிப்பற்ற பொக்கிசங்கள்; பெற்றோர்கள் நமது வழிகாட்டிகள்; ஒளிகாட்டிகள்; தடம் மாறாது தவறுகள் இழைக்காது தன்மானத்தோடு வாழ நம்மை உருவாக்கியவர்கள்; நமக்காக தன் உடல் பொருள் ஆவியை தந்தவர்கள்; திடமாக நம்மை மாற்றியர்கள்; புடம் போட்ட தங்கமாக நம்மை மாற்றியவர்கள் நம் பெற்றோர்கள்; பெருமைக்கு உரியவர்கள்; பெரும் துன்பத்தையும் தின்மையாய் சுமப்பர் நமக்காக; கடனையோ உடனையோ வாங்கி நம்மை சோறுட்டி சிராட்டி கல்வி கலை தந்து பிறர் பாரட்டும் படி வாழ வைத்தவர்கள் நம் பெற்றோர்கள்; ஊதியம் பெறாது நம்மை அன்புடன் வளர்த்த ஒரே உண்மை அன்பு ஊழிர்கள்; நம் அன்பு ஒன்றுக்காக உருகுபர்கள் பெற்றோர்கள்; நாம் மானத்தோடு வாழ, தன் மானத்தை இழந்தாலும், தன்னை உருகுழைத்து, உண்ணாது உறங்கியும் உறங்காது நம்மை உருவாக்கிய அர்புத படைப்பு அவர்கள்; நமக்காக தன் உடல் பொருள் ஆவியை தந்தவர்கள்; திடமாக நம்மை மாற்றியர்கள்; புடம் போட்ட தங்கமாக நம்மை மாற்றியவர்கள் பெற்றோர்கள்; நடமாடும் தெய்வங்கள்; நம்பாசத்திற்காக பசியையே விட்டவர்கள்; பைத்தியமாய் பித்து பிடித்து நம்மையே சுற்றி சுற்றி வந்தவர்கள்; நம்மை ஈன்றெடுக்க தன்னையே கொடுத்தவர்கள்; நம்மை படித்து ஆழாக்க தன் உடமைகளை விற்றவர்கள்; எல்லாவற்றையும் நமக்காக இழந்தார்கள்; நாம் மதிப்போடு வாழ தன் மதிப்பை இழந்தவர்கள்; தங்களையே தியாகம் செய்தவர்கள்; நம்மை தெதுக்கிய சிற்பி அவர்கள்; அன்பை இதயத்தில் நிறப்பி, நம்மை இடுப்பிலும் மார்பிலும் தோளிலும் சுமந்து வளர்த்தவர்கள்; நாம் தோற்றுப்போகாமல் இருக்க, தங்கள் வாழ்க்கையில் தோற்றுப்போனவர்கள்; கண்ணும் கருத்துமாய் காத்தவர்கள்; நமக்காக எந்த அவமானத்தையும் சுமக்க தயாராக இருப்பவர்கள் பெற்றோர்கள்; தந்தையின் பாசம் தாங்கியே சுமக்கும்; தாயின் பாசம் தங்கியே வீசும்; பெற்றோர்களை காயப்படுத்தாது இரு; பெற்றவர்களை மதித்திடு; பெற்றோரிடம் மனம் விட்டு பேசிடு; பெற்றோர்களுக்காக நேரத்தை ஒதுக்கிடு; வயோதிகத்தில் பெற்றோர்களை பாரம் என்று நினைக்காதே; அவர்கள் நம்மை என்றும் பாரம் என்று நினைத்ததே இல்லை; பெற்றடுத்த பெற்றோர்களை பெருமை படுத்து; பெற்றோர் குழந்தைகள் உறவை உறுதிபடுத்து; அன்பு இல்லத்தில் ஆனந்தம் குடி கொல்லட்டும்; பண்பும் பரிவும் படை எடுக்கட்டும்; புண்படுத்தாதே பெற்றோர்களை; அன்னை தந்தைகளின் தியாகத்திற்கு மதிப்பு கொடுப்போம்; உயிர் கொடுத்த பெற்றோர்களை உதாசீனம் படுத்தாது, முதுமையில் அவர்களை பாதுகாப்பது நமது கடமை, பெற்றெடுத்து பேனி வளர்த்த பெற்றோர்களை மறவாதீர்கள்; பெற்றவர்களை மதிக்காதவர்கள் பேடிகள்; பெற்றவர்களை மறந்தவர்கள் பேயிக்கு சமமானவர்கள்; பெற்றோர் உலக தினமாகிய இன்று நம் பெற்றோர்களை பெருமை படுத்துவோம். விலகிச்சென்றாலும் விட்டுச் சென்றாலும் விடாபிடியாக தொடர்ந்து நம்மை விரட்டி வருவது, பெற்றோர்கள் பாசம் ஒன்று மட்டுமே; தன்னலம் இல்லாதது தகப்பன் பாசம்; சுயநலம் இல்லாதது தாயின் பாசம்; அம்மாவின் பாசம் அப்படியே ஒழுகும்; தகப்பனின் பாசம் கடமையில் தெரியும்; கலப்படமில்லாதது பெற்றோர்களின் பாசமும் நேசமும்; எனவே பேனிகாத்த அன்னை தந்தையாம் ; பெற்றெடுத்து பேனிகாத்த நம் பெற்றவர்கள் பட்ட கஷ்டத்தை ஒரு நிமிடம் நினைத்து பாரீர்; பெற்றோர்களை மறவாதீர் கைவிடாதீர் பிள்ளைகளே. உலக பெற்றோர் தின வாழ்த்துக்கள் அ.முத்துவேழப்பன்
Chennai, Tamil Nadu, India.