சுற்றுலாத் தளம் சுடுகாட்டுத் தளமான வையநாடு இயற்கையின் சீற்றம்; இதில் இல்லை மாற்றம்; இமைக்காது பெய்த மழைப்பொழிவு; சயனத்தில் மக்கள்; சரிந்து விழுந்த மலைச் சரிவு; இரையானது கூண்டோடு கிராமம்; இரவு தந்த இறுதி உறக்கம்; இருக்கும் இடம் தெரியாது போன சில கிராமங்கள்; கூண்டோடு புதையுண்ட மனித கும்பல்; இரைச்சல் சப்தம் எங்கெங்கும்; உறவுகளின் இரங்கள் தகவல், புலம்பித்தவிக்கும் மக்கள், புலம்பெயரும் மக்கள் கூட்டம்; வையனாடு வயனாடு, வாடி, வனப்பு பொழிவிழந்து மயானக்காடாகியது. இயற்கை உலுக்கிப் போட்ட வயநாடு இயற்கையின் இறையாண்மை தந்த துயரப் பாடம் இது தான் இயற்கையின் அகோரத் தாண்டவம் . xxxxxx இயற்கையின் அகோரத்தாண்டவன் இயற்கை நான்; இயற்கை நான்; இழந்து தவிக்கும் அபலை நான்; இயற்கை நான் பல கோடி கோடி ஆண்டுகள் கேடின்றி வாழந்த இயற்கை நான். இயற்கை நான் இயற்கை நான் என் இருக்கையே பெரிதும் மலைகள் தான்; என் இருக்கையில் அமர இடம் கொடுத்தால் என்னை சுறுக்கி இறுக்கியே அழிக்கத்துடிப்பது மனிதன் தான்; மனிதா, இனிய சோலை அமைத்தேன் இதமவருவேன்றைத் தந்தேன்; சுவைக்க பழங்கள் பல பல தந்தேன்; இருகரம் சேர்த்து கும்பிடவேண்டிய நீ இரணிய நானாய் இருப்பிடம் கொடுத்த என்னையே, ஈவு இரக்கம் இன்றி பதம் பார்க்கத் துவங்கிவிட்டாய்; இன்று என்னிடம் இரக்கம் காட்டச் சொல்கின்றாய்; உன் மனம் போல் வாழ என் உலகுக்குள் ஊடுருவினாய்; பிடித்த பேராசையால் பிழைகள் பல செய்தாய்; போகட்டும் என்று நினைத்தால், சமவெளியில் உன் சேட்டைகளை சகித்து என்னையே சமாதானப் படுத்திக் கொண்டாலும், என் அழகு வதனமாம் காடுகளுக்குள் புகுந்தாய்; என் வளங்களை பெற்று உண்டு சுகப்படாது என் வளங்களைச் சுரண்டி சூரையாடினாய்; கண்டபடி கண்மூடித்தனமாய் என் குழந்தைகளாம் வனங்களை வளங்களை வெட்டி வெட்டி சீரழித்தாய்; சிந்திக்காது சின்னாப்பின்ன மாக்கினாய்; என் சாம்ராஜியத்திற்குள் புகுந்து எனக்கே இருக்கையில்லாது உன் சாம்ராஜியத்தைத் துவங்கி சுரண்டினாய்; வெயிலால் சுட்டெரித்தும் விட்டபாடில்லை, என் அழகை சீர்குழைத்தாய்; உன் அழிவுக்கு நீயே அஸ்திவாரம் போட்டாய்; அடைக்கலம் தந்த என்னையே அடிமையாக்கப் பார்த்தாய்; அட்டையாய் ஒட்டி என் வளங்களை உறிஞ்சினாய்; மனிதா, உன்னைப் போன்று பற்பல உயிரினங்களை சுமக்கின்றேன், பறவைகளுக்கு சரணாலயமாக இருக்கின்றேன், விலங்குகள் விலகிச் செல்லாமல் விரும்பிய படி வாழ இடம் தருகின்றேன். ஊர்வன, பறப்பன, நடப்பன என்று எல்லா ஜந்துக்களுக்கும் ஜனரஞ்கமாக வாழ்கைத் தந்தேன், இவைகள் இன்றும் பாசத்தோடு என்னோடு தான் என் அரவணைபில் வாழ்கின்ன; நீயும் வந்தாய்; நேசிக்க ஆரம்பித்தாய்; யோசிக்கத்துவங்கினாய்; யாசித்த நீ; ராட்சசன் ஆனாய்; என்னை வெட்டி வெட்டி என் அழகிய பசுமைபோத்திய ஆடைகளையெல்லாம் நீக்கி நிர்வாணமாக்கத் துவங்கினாய்; என் வழங்களை( அளிப்பு) எல்லாம் பெற்று அனுபவிக்காது, ஆட்டம் போட்டாய்; ஓட்டம் காட்டி ஒட்டுமொத்தமாக அபகரித் துவங்கினாய்; கண்டபடித் திரிந்த நீ கண்மூடித்தனமான வாழ்க்கை வாழ, மலையைக் குடைந்தாய் , மரங்களை வெட்டினாய், கானகங்களை காணமல் போக வைத்தாய்; உன் உல்லாச வாழ்விற்காக, என்னை ஊனமாக்க வைத்து, கண்ணீர் வடிக்க வைத்தாய்; அழகு தளமாக ஆக்குகின்றேன் என்று, அங்கு வந்து அமர்ந்து வேண்டாத கழிவுகளையெல்லாம் என்மீ து கொட்டி என்னையே குப்பைத் தொட்டியாய் ஆக்கினாய்; ஆக்கிரமிக்கத் துவங்கினாய் ஆபத்தை அறியாது கட்டிடங்கள் பல எழுப்பினாய்; கண்டபடி சிதைத்தாய்; நீரைத் தேக்கின்றேன் என்று உன் விருப்பப்படி தேவைக்கு மேல் தேவைக்கு மேல் பெரிய பெரிய அணைக்கட்டுக்களைக் கட்டி என் இடங்களை சுறுக்கினாய்; சுற்றிச் சுற்றி வந்த நீ, என் இனங்களை சுருட்டினாய். உன் அறிவால் அடிமையான நான் என் அழிவால் நீ வாழ முடியாது என்பதை உணர்த்த, அவ்வப்போது பேய் மழை பெய்தேன், நிலச் சரிவை தந்து சில கட்டிடங்களை பெயர்த்தும் உனக்கு புத்தி வரவில்லை, கனிகளை சுவைக்காது, பிடிவாதமாய் நீயும் கனிமங்களை சுரண்டி மலையைத் தகர்த்து மரங்களை வெட்டி மலையை முகடாக்கினாய்; என்னை விதவையாக்கினாய். அழகை அழித்து அழிவைத் துவங்கி வைத்தவன் நீ; இனிதான் நீ என் ஆக்ரோச அகோரத் தாண்டவத்தை பார்க்கப் போகின்றாய். மோகம் கொண்டவனே மேகக் குவியல் மேக வெடிப்பு, பேய் மழை,ஏரிமலை, நிலச் சரிவு, நில நடுக்கம் என்று அவதாரம் பல எடுப்பேன், கோரத்தாண்டவம் ஆடுவேன்; சரிந்தே உன்னை புதைப்பேன் நிலச்சரிவில் அடித்தே வருவேன் வெள்ளமாக, எடுத்தே செல்வேன் பிரளமாயமாக, வெறிபிடித்து வருவேன், வேதனை தந்த உன்னை ஈவு இரக்கம் பேதம் பார்க்காது பெயர்த்தே எடுப்பேன்; புலம் பெயர்ந்து வந்த உன்னைப் புதைப்பேன்; புரிதலோடு புரிந்து வாழ்ந்தால் பிரியாது உன்னுடன் கூடிவாழ்வேன்; இல்லையேல் புரட்டிப்போடுவேன். மனிதா இயற்கையை காக்கத் தவறினால், உன் இருக்கையே இல்லாது போகும்; இயற்கையைக் காப்போம் இணைந்து வாழ்வோம்; நம் பேராசைப் பசிக்காக பேயாய் மாறி பசுமையை அழிப்பதை விடுவோம்; இயற்கையை அகோரத் தாண்டவம், ஊர்த்துவத் தாண்டவம், ஆச்சர்யத் தாண்டவம் ஆடவிடாது ஆனந்தத் தாண்டவம், சௌந்தர்யத் தாண்டவம் ஆடவைப்போம் இயற்கையோடு ஒன்றி வாழ்வோம்; காலை வணக்கத்தைக் கூறும் அன்பன் அ. முத்துவேழப்பன்
Chennai, Tamil Nadu, India.